Month: August 2021

எங்களுக்கு இது வேண்டவே வேண்டாம்!!! – கிராம மக்கள் பட்டினி போராட்டம்.

திருவெறும்பூர் அருகே உள்ள நத்தமாடிபட்டியில் நடந்து வரும் தனியார் (ஜியோ) செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திடக் கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராமமக்கள் இணைந்து பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 34 கிலோ வெள்ளி.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , தக்காரும் திருச்சி , பெரம்பலூர் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையரும்மான அரங்க.சுதர்சன் , திருவானைக் கோயில் உதவி ஆணையர் மாரியப்பன், மேலாளர் உமா…

ஊட்டி மலை ரயிலுக்கு புதிய 2 நீராவி இன்ஜின்கள் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரயிலுக்கு, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், இரண்டு புதிய இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி, ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 112 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட மலை…

சாக்கடையில் அரை நிர்வாணத்துடன் கிடந்த ஆண் பிணம் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி ஜி கார்னர் அருகே உள்ள பாதாள சாக்கடையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கே கே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் கேகே நகர் காவல்…

தொடரும் ஊரடங்கு – கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

தமிழ்நாடு அரசு கொரானோ தொற்று பரவல் தடுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி கொரானோ நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் வெள்ளி , சனி, ஞாயிறுற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பின்படி வருகிற…

குத்தகைக்கு போகும் திருச்சி ஏர்போர்ட் – மத்திய அரசு முடிவு.

மத்திய அரசு நிதி ஆயோக் உதவியுடன் தேசிய பணமாக்குதல் என்ற திட்டத்தின் மூலம் பெரும் வருவாய் தரக்கூடிய அரசு சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு ₹6 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. அதன்படி, விமான நிலையங்கள், ரயில்…

மகன் முன்னிலையில் பிரபல நடிகருக்கு மீண்டும் டும் டும்.

தென்னிந்திய சினிமாவில் சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான பிரகாஷ் ராஜ் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் கே.பாலசந்திரர் அவர்களால் டூயட் படத்தில் அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். இவர் தனது சிறந்த நடிப்பால் மக்களை கவர்ந்தார். அனைத்து வகை…

தடுப்பூசி போட்டுக்கொள்ள வாட்ஸ்அப் முன்பதிவு – மத்திய அரசு அறிவிப்பு.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் இனி வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2வது அலை குறைந்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும்…

திருச்சியில் (24-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 58 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 605 பேர்…

வாகனத்தில் ஒட்டப்படும் போலி ஸ்டிக்கருக்கு கிடுக்குப்பிடி – போலீஸ் அதிரடி.

தமிழகம் முழுவதும் ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்களைப் போன்று ‘G’ அல்லது ‘அ’ எழுத்து உள்ளது.சிலர் Human Rights, Police, Press, Lawyer போன்ற சொற்களின் ஸ்டிக்கரைக் வாகனத்தில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர். வாகனச் சோதனையின் போது இவர்கள் காவல் துறையினருக்கு…

கொரோனா தளர்வு – முக்கொம்பூரில் குவிந்த பொதுமக்கள்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பூர் பட்டர்பிளை பார்க் கல்லணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று பரவல் குறைந்த காரணத்தால் கட்டுப்பாடுகளில் பல…

ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ சார்பில் வீதியில் நடந்த மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்.

ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் உரிமைகளை பறித்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமையாக்குபவை எனவே அச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் சுற்றுச்சூழல் திருத்த மசோதா, மின்சார திருத்த சட்டம் ஆகிய மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற…

திருச்சியில் (23-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 64 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 616 பேர்…

சிறுவனைக் கடத்திய 2- பேர் குண்டர் சட்டத்தில் கைது.

திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்டகணேசாபுரம்புதுத்தெருவில் கடந்த மாதம் 10ம் தேதி சிக்கன் கடையில் 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் இரவு சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சிலர் கடத்திச் சென்றனர். கடத்தல் தொடர்பாக சிறுவனின் தந்தை ரமேஷ்ராஜ் பொன்மலை…