Month: February 2023

சாம்பல் புதனுடன் கிறிஸ்த வர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது.

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதனுடன் இன்றைய தினம் தொடங்கி 40 நாட்கள் தவக்காலம் தொடங்குகிறது. மேலும் வருகிற ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி ஈஸ்டர்…

முதல்வருக்கு நன்றி தெரிவித்த கல்லூரி மாணவி – வாழ்த்து கூறிய முதல்வர்.

திருச்சி, சங்கிலியாண்டபுரம் கோனார் தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி மகள் ராஜேஸ்வரி. இவர் கடந்த கல்வியாண்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்ட வகுப்பு சேர்ந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அவர் விரும்பிய பி.டெக் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.…

திருச்சி கீழக்குறிச்சி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி எம்.பி திருநாவுக் கரசுவிடம் அளித்த கோரிக்கை மனு.

திருச்சி திருவெறும்பூர் கீழக்குறிச்சி கிராம பஞ்சாயத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று மாலை திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருச்சி எம்பி திருநாவுக்கரசை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-…

ஏர்போர்ட்டில் பயணியின் உள்ளாடையில் ₹.16.46 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை…

கோடை காலம் துவங்கியதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் வரும் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்.

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடங்கியதை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமம்மின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது, மேலும் இனி வருடம் தோறும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு அவர்களுக்கு மூலிகை…

திருச்சி வந்த முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த திமுக அவைத் தலைவர்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர், திருச்சி கலெக்டர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் திமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திருச்சி கேகே நகர் பகுதியை சேர்ந்த ஒய்வு…

திருவிழா நடத்த தடை – திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள்புரம்,கீழ அன்பில் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மாசி…

முதியவரிடம் அரிவாள் முனையில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.

திருச்சி வயலூர் மெயின் ரோடு சாந்தாசீலா நகர் லாவண்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து (வயது 61). இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் எனக்கு பிறந்தநாள் கொண்டாட பணம் தருமாறு அரிவாள்…

திருச்சியில் போலீஸை வெட்டிய 2-ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு – மருத்துவ மனையில் அனுமதி.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை சதாசிவம் மகன் இளவரசன் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் கையெழுத்து போட வந்த பொழுது படுகொலை செய்யப்பட்டார் . இந்த கொலையில் தொடர்புடைய திருச்சி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடிகள்…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 826 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான…

மாநில அளவிலான சிலம்ப போட்டி – 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங் கனைகள் பங்கேற்பு.

உலக சிலம்பம் இளைஞர் சம்மேளனம் சார்பில் டாக்டர் ஜெயபால் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த் போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒற்றை…

தேசிய மாணவர் படை யினருக்கு “சி” சான்றிதழ் தேர்வு திருச்சியில் நடந்தது,

திருச்சியில் மண்டல அளவிலான தேசிய மாணவர் படை மாணவியர்களுக்கான சி சான்றிதழ் தேர்வு திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிப்ரவரி 18 19 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. இன்று அதற்கான தேர்வினை கர்ணல் சுனில் பட் ,கர்ணல் சந்திரசேகர், கர்ணல்…

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் அரசு, தனியார் பள்ளி வேலையில்லா ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி விமான நிலையப் பகுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் நாகை செல்லையா மற்றும் மாநில செயலாளர் சிவகலா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதன்மை விருந்தினராக…

திருச்சியில் தமிழ் எழுத்தை டாட்டுவாக வரையும் உலக சாதனை நிகழ்ச்சி – டாட்டூ பிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு.

திருச்சி தில்லை நகர் 11-வது கிராஸ் மேற்கு பகுதியில் எக்ஸ்ட்ரீம் டாட்டு ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டூடியோவின் உரிமையாளர் முத்துக்குமார். இவர் வரும் 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப் படுவதை முன்னிட்டு தாய்மொழியாம் தமிழ் மொழியை…

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் திருச்சியில் நாளை 19-ம் தேதி சமூக ஒற்று மைக்கான வாகன பிரச்சார பயணம் நடைபெற உள்ளது.

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் இஸ்லாமிய இயக்கத்தின் மாநில தலைவர் முகமது ஹனிபா, இளைஞர்அமைப்பு மாநில செயலாளர் கமாலுதீன், திருச்சி மக்கள் சேவை அமைப்பின் பொறுப்பாளர் நவாஸ்கான் மற்றும் முனைவர். ஹஜ்மொய்தீன் ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நிருபர்களுக்கு பேட்டி…