Category: திருச்சி

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா – அனைத்து கட்சியினர் மரியாதை.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக முன்னாள் முதலமைச்சர்…

20-ஆண்டு கால இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி – தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் – விமன் இந்தியா மூவ் மெண்டின் அறிவிப்பு.

விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ அலுவலகத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக விம் மாநில செயற்குழு உறுப்பினர் சுலைஹா வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு விம் மாநில…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்பாட்டம் – 150-க்கும் மேற்பட்டோர் கைது.

தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் முழு…

மத்திய பல்கலைக் கழகங்களால் 10 பைசாவிற்க்கு பிரயோஜனம் இல்லை – அமைச்சர் கே.என்.நேரு அதிரடி பேச்சு.

திருச்சியில் புத்தக திருவிழா செப்டம்பர் 16 முதல் 25 ஆம் தேதி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது முதல் நாள் துவக்க விழாவான இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்…

குவைத் நாட்டில் இறந்த முத்துக் குமரனின் உடலுக்கு – திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் அஞ்சலி.

குவைத் நாட்டில் பணி இடத்தில் இறந்த முத்துக்குமரனின் உடல் , தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டது. நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்…

திருக் கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் -தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் கோரிக்கை.

ஐ.நா சபையால் உலக முடி திருத்துவோர் தினமாக அங்கீகரிக்கப்பட்ட செப்டம்பர் 16-ந் தேதியை தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் சங்க ஸ்ரீரங்கம் மாநகர சங்கம் சார்பில் நேற்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கொண்டாடப்பட்டது.…

திருச்சி 56-வது வார்டு பகுதி பள்ளியில் காலை உணவு திட்டம் – கவுன்சிலர் PRB. மஞ்சுளாதேவி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் இன்று திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே என் நேரு இப்பள்ளியில் பயிலும்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு எடுத்துக்காட்டிய அரசியல் ஆசான், தந்தை பெரியாரின் வாரிசாகவும் முத்தமிழறிஞர்…

சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

திருச்சியில் கடைக்கு சென்ற 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் , வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது…

திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொண்டப்பட்டு வருகிறது அதே போல திருச்சி திமுக மத்திய மாவட்டம் சார்பாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும்…

இந்துக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டம் – அமைச்சர் சேகர் பாபுக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கெடு.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பன்குளம், பெரிய நாயக்கசத்திரம், சித்தாநத்தம், கொமக்குடி, மணமேடு, பாகனூர் ஆகிய 6…

திருச்சியில் ஆமினி வேன்மீது லாரி கவிழ்ந்த விபத்தில் – குழந்தை உட்பட இருவர் பலி.

திருச்சி மாவட்டம் வாத்தலை பகுதியில் சாலை ஓரத்தில் நின்றிருந்த ஆம்னி வேன்மீது அதிவேகமாக திருச்சி நோக்கி வந்த லோடு லாரி நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து வாத்தலை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் விபத்து…

திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் – அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை:-

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அறிவிப்பின்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் திமுக…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு போராட்டம்.

தமிழகத்தில் அரசுப் பணி மேற்கொள்ளும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மற்ற அரசுப் பணியாளா்களுக்கு வழங்குவதைப்போல, அரசு கருவூலத்தின் வாயிலாக மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும், கருவூலம் வழியாக ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்…

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரை கண்டித்து தண்ட வாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

திருச்சி கல்லுக்குழி பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் அந்த இடம் ரயில்வேக்கு சொந்தமானது என்று கூறி உடனடியாக இடத்தை காலிசெய்ய…

தற்போதைய செய்திகள்