Latest News

தமிழகத்தில் உள்ள 30000 காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி திருச்சியில் நடந்த தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:- தாளக்குடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு – முக்கிய நபர்களின் விவசாய நிலத்திற்கு 24 மணி நேரமும் நீர் வழங்குவதாக ஊராட்சி மன்ற செயலாளர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு:- அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகளுக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வழங்கினார். திமுக அரசைக் கண்டித்து – அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் திருச்சியில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:- மணப்பாறை பகுதியில் காங்கிரசுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு மற்றும் குழுவினர்:-

திருச்சி புங்கனூரில் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் புதிய படிப்பக கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் புங்கணூர் ஊராட்சியில் திருச்சிராப்பள்ளி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட படிப்பகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த படிப்பகத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், Tnpsc உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில்…

திமுக அரசை கண்டித்து அதிமுக திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட வற்றால் தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் விடியா திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக…

கொட்டும் மழையில் கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசியினர் தர்ணா போராட்டம்.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அதில் வாரிசு பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நடத்துனர் இல்லா பேருந்து இயக்கம் கைவிடப்பட வேண்டும் (ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்) தனியாருக்கு சாதகமாக உள்ளதை புறக்கணிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு…

திருச்சி குமரக்குடி கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கிடா வெட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கார்த்திகை மாதம் மூன்றாவது வாரம் குமரகுடி கிராமத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் திருக்கோவிலுக்கு கிடா வெட்டு திருவிழா வருடம் தோறும் நடைபெறும் வழக்கம் அந்த வகையில் இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளிடம் ஆற்றங்கரையில் சுவாமி கிரகம் பாலித்து அம்மன் திருவீதி உலா…

காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி SP-யிடம் பெண் புகார்.

திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் பொன்னி இருளன். இவரது மனைவி அமுதா (40). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனக்கு சொந்தமான மாருதி காரை அடமானம் வைத்து ரூபாய் 1 லட்சம் வேண்டும் என பூலாங்குடியை சேர்ந்த நாராயணம்மாள் என்ற பெண்ணிடம்…

திருச்சியில் காற்று மாசுபாடு குறித்த பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை திருச்சி மாநகராட்சி, மத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளி கல்வித்துறை மற்றும் தேசிய பசுமை படை இணைந்து காற்று மாசு படுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி தேசிய மேல்நிலை பள்ளி வளாகத்தில்…

திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் திமுக அரசை கண்டித்து. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பில் திருச்சி அண்ணா சிலை அருகே…

திருச்சியில் போக்சோ வழக்கிற்கு 5000 லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் கைது.

திருச்சி லால்குடி வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மகன் யுவராஜா என்பவருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜ் அளித்த புகாரின் பேரில் ஜெகதீசன் என்பவரின் மீது…

நல வாரியத்தை செயல்படுத்த கோரி – தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு.

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது அன்லாக் நிலுவைத் தொகை கூறும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக…

ஸ்ரீ லோக நாயகி அம்பாள் சமேத சாம வேதீஸ்வரர் கோயிலில் 108 சங்கா பிஷேகம், சிவ ஆகம முறைப்படி 108 சிறப்பு திரவிய பொருட்களை கொண்டு சிவ பெருமானுக்கு சிறப்பு ஹோமம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோக நாயகி அம்பாள் சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்,சிவ ஆகம முறைப்படி 108 சிறப்பு திரவிய பொருட்களை கொண்டு சிவபெருமானுக்கு சிறப்பு ஹோமம் நடைப்பெற்றது.…

அரசிடம் இருந்து சலுகைகளை பெற்றுத் தர அருந்தமிழர் ஒன்றுகூடல் கூட்டமைப்பு போராடும் – தலைவர் அமுதவேந்தன்

அருந்தமிழர் ஒன்றுகூடல் கூட்டமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்டத் தலைவர் அமுதவேந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு அருந்தியர் மக்களின் உரிமைகளை பெறுவது…

கரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மத்திய மோடி அரசு கரும்பு டன் ஒன்றுக்கு 8,100…

குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக அல்ல, மின் வாக்குபதிவு இயந்திரம் – மாநில தலைவர் ஜெய்னுல் ஆப்தீன் பேட்டி

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நபிகள் நாயகம் குறித்து விளக்கும் வகையில் சிறப்பு மாநாடு திருச்சி செம்பட்டு அருகே ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சிங்காரத்தோப்பு அருகே இன்று நடைபெற்றது. இதில்…

திருச்சியில் நடந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – நடிகை ஆண்ட்ரியா வை வரவேற்ற மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ்.எல். மொராய்ஸ், அவரது மனைவி பிரிய மொராய்ஸ்.

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சி மொராய்ஸ் சிட்டியில் திரைப்பட நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. முன்னதாக மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ். எல். மொராய்ஸ், இவரது மனைவியும் இயக்குனருமான பிரிய மொராய்ஸ் ஆகியோர்…

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் சக்தி டீ ஸ்டாலில் 07.09.2022 மற்றும் 01.12.2022 ஆகிய தேதிகளிலும் , திருச்சி , திண்டுக்கல் மெயின் ரோடு , கருமண்டபம் பகுதியில் உள்ள அம்மன் பீடா ஸ்டாலில் 06.12.2022 – ம் தேதியில் ஆய்வு செய்யப்பட்டு…

தற்போதைய செய்திகள்