Latest News

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் வணிகர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்:- திருச்சியில் ரவுடி சுட்டு பிடிப்பு – காயம் அடைந்த போலீசாரை நலம் விசாரித்த கமிஷ்னர்:- திருச்சியில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்:- திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் 1500கிமீ தொலைதூரம் சென்ற புறா மற்றும் அதன் உரிமையாளர் சிவகுமாருக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கௌரவிப்பு:- மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:-

கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது – ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருத்தீன் மன்பஈ பேட்டி.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஆபிருத்தீன் மன்பஈ தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் அர்சத் அல்தாபி, மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ராஜிக் பாகவி, சம்சுல் இக்பால்,…

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு – போலீசார் தீவிர சோதனை.

திருச்சி தில்லைநகர் 7-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவர் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் அங்குள்ள 80 அடி சாலையில் உள்ள ஒரு உறவினரை பார்க்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து…

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாள் – கமலவல்லி நாச்சியார் உடன் சேர்த்தி சேவை சாதித்தார்.

108 திவ்ய தேசங்களில் இரண்டாவது வைணவத் தலம் என்ற பெருமைக்குரிய உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நம்பெருமாள் -கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் பங்குனி…

இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளை ஒன்றிணைக்க திமுக தலைவர் முன்வர வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாச சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம…

யுனைட்டட், M.D ஆகிய நிறுவனங்களை கண்டித்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட நிறுவனங்களை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள் ஜோஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் வஞ்சிக்கும் விதமாக…

திருஈங்கோய் மலை கோயில் வனப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ .

திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருஈங்கோய்மலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயத்தில் மூலவர் மரகதாசலேஸ்வரர் எனும் பெயர் கொண்ட ஈஸ்வரனை அகத்தியர் ஈ உருக்கொண்டு வழிபட்டதாக புராண சம்பவங்கள் கூறப்படுவதுண்டு. இந்நிலையில் மலைகோயிலில் பகுதியில் இன்று…

திருச்சியில் பெண்ணிடம் 1-லட்சம் ரூபாய் வழிப்பறி – சிசிடிவி மூலம் குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி கீழவாசல் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா வயது 46. இவர் ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கனரா வங்கியில் தன்னுடைய நகைகளை அடகு வைத்து 1 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். இதை வங்கியின் உள்ளேயே…

சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவச கல்வி – ஏப்.12 கடைசி நாள்.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முதுநிலை இயக்குநர் (தேர்வுகள்) சதானா பரசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “படிப்பில் சிறந்து விளங்கும் எஸ்.சி. மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவச உறைவிட வசதியுடன் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் சேர்ந்து பயில…

எம்.எஸ்.விக்கு 1-கோடியில் நினைவு இல்லம் – கேரள அரசு அறிவிப்பு.

மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மரியாதை செய்யும் வகையில், அவர் பிறந்து வளர்ந்த அவரது சொந்த கிராமத்தில் நினைவு இல்லம் கட்ட கேரள அரசு 1 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.. இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: …

திருச்சி மக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை!!!

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- உங்களின் வங்கிகணக்கை KYC அப்டேட் செய்ய வேண்டும் , ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் , ஏடிஎம் கார்டு பிளாக் ஆகிவிட்டது , இது போன்ற காரணங்களுக்காக…

திருச்சி மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்ஸ் சார்பில் பாடகி லதா மங்கேஷ்கர் 7-அடி உயர கேக் உருவ சிலை.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் 7 அடி உயர முழு உருவ கேக் சிலை – மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்ஸ் நிறுவன இனிப்பு விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவையொட்டி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது திருச்சி வயலூர் சாலையில் உள்ள குமரன்…

திருச்சியில் 2-ம் நிலை சிறைக் காவலர்களுக்கு 6 மாத கால பயிற்சி – கமிஷனர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்பட்ட 2020 – ஆம் ஆண்டுக்கான காவல் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 124 சிறைக் காவலர்களுக்கு கடந்த 08.03.2022 – ஆம் தேதி பணிநியமண ஆணை வழங்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக , தமிழ்நாடு…

வருகிற பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

தி.மு.க. பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என மூன்று வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 2- வாரங்களுக்கு – 6 நாட்கள் என வாரத்திற்கு திங்கள், புதன்…

திருச்சியில் நடந்த “இன்டர் ரீஜன் 2022” இறகுபந்து போட்டி.

கனரா வங்கி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சங்கம் சார்பில் “இன்டர் ரீஜன் 2022” இறகுபந்து போட்டி திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் கனரா வங்கி ஊழியர்கள் தமிழகம் முழுவதும் இருந்து சுமார்  100 க்கும்…

திருச்சியில் விநாயகர் சிலை உடைப்பு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிராட்டியூர் வழி பிரியும் முகப்பில் அருள்மிகு ஸ்ரீ வழிவிடு விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இந்த கோவில் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் சாமி தரிசனம்…