Latest News

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு பகுதி செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் மானிக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது:- திருச்சியில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்த – எம்பி துரை வைகோ:- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை செய்து, தங்கத்தேர் இழுத்தனர்:- இருண்ட கால அதிமுக ஆட்சியிலிருந்து தமிழகத்தை மீட்டு தி.மு.க ஆட்சி விடியலை தந்துள்ளது – திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு:- திருச்சி ரயில்வே ஜங்ஷனில் 12.5 கிலோ கஞ்சா பறிமுதல்:-

திருச்சியில் அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு – எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய 9 பேர் கைது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழரசூர் ஊராட்சியில் கடந்த 16 ந்தேதி ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு விழா நடத்தியதனை தடியடி நடத்தி கலைத்த காவல் உதவிஆய்வாளர் இளங்கோவன் மீது தாக்குதல் நடத்திய 9 பேரை கல்லக்குடி போலீசார் கைது செய்தனர்.…

திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் R.K.ராஜா தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக தமிழக முன்னால் முதல்வரும் புரட்சி நடிகர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்ற அருகில் உள்ள புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு R.K.ராஜா தலைமையில் மாலை அணிவித்து…

வேலை இல்லாத இளைஞர் களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு.

கோவா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அங்கு பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.…

திமுக மற்றும் தோழமை கட்சிகளுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகளுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தை…

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு – முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர், இதய தெய்வம் “பாரத ரத்னா”, புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று காலை ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி நிர்வாகிகள் சார்பில் சோமரசம்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத் தேரோட்ட உற்சவம் இன்று நிலைத்தேர் வைபவமாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 19-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தைத்தேரோட்ட உற்சவத்தையொட்டி தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி…

திருச்சியில் இன்று ஒரே நாளில் 453 பேர் பாதிப்பு – 1 பலி.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் பாதிப்புகளும், இறப்பு விகிதமும் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பெரும் முயற்சியாலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றின் மூலம் கொரோனா…

திருச்சியில் பஸ் ஓட்டுனர் வெட்டிக் கொலை – 2 பேர் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் அடுத்த ஆர்.கோம்பை கிராமம் காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர்கள் சிக்ககவுண்டர்- பழனியம்மாள் தம்பதி. இவர்களது மகன்கள் ஆறுமுகம் (55), முருகேசன் (50). சிக்ககவுண்டர் கடந்தசில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஆறுமுகம் தனியார் கல்லூரியில்…

முழு ஊரடங்கில் வெறிச்சோடிய திருச்சி – போலீசார் கடும் சோதனை.

தமிழகத்தில் கொரோனோ, ஒமிக்ரான் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை இரவு 10 மணி முதல் 5 மணி வரை பகுதி நேர…

திருச்சியில் மாட்டுப் பொங்கல் விழா – பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்த குட்டீஸ்.

உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று மாடுகள் குளிப்பாட்டப்பட்டு அதன் கொம்புகளில் வர்ணம் தீட்டி, நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு மாலைகள் இட்டு, சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப் படுகின்றன.…

சூரியூர் ஜல்லிக்கட்டில் வாலிபர் பரிதாபமாக பலி.

திருச்சி சூரியூர் மாட்டு பொங்கலை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் காளை மாட்டை வாடி வாசலுக்கு பேரிகாட் பகுதி வழியாக அழைத்து வந்தபோது மாட்டின் உரிமையாளரான ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் வயது (32) என்பவரை மாடு தொடை மற்றும்…

திருவள்ளுவர் தினம் – அமைச்சர் கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி எழுதமிழ் இயக்கத்தின் சார்பில் திருச்சி தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கும் தமிழ்தாய் சிலைக்கும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகரச் செயலாளர் அன்பழகன், டாக்டர்…

சூரியூரில் ஜல்லிக்கட்டு விழா – வீரர்களை பந்தாடிய காளைகள்.

திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம் அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு…

போதை ஆசாமிக்கு விழுந்த மரண அடி – பஸ் நிலையத்தில் தள்ளுவண்டி வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் அராஜகம்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியிலுள்ள மாநகர பேருந்துகள் நிற்கும் இடத்தில் இன்று மதியம் போதை ஆசாமி ஒருவர் அங்கு தள்ளுவண்டி கடையில் இருந்த பெண்ணிடம் தவறாக பேசியதாக கூறி அப்பகுதியில் தள்ளுவண்டி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள், மற்றும் ஆட்டோ…

தைப் பொங்கல் திருநாள் – பொங்கலிட்டு இளம் பெண்கள் கும்மியடித்து உற்சாகக் கொண்டாட்டம்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளான இன்று தைப்பொங்கலாகக் கொண்டாபட்டு வருகிறது. இந்நாளன்று அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை…

தற்போதைய செய்திகள்