Month: June 2022

சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி – அரசு மரியாதை யுடன் நல்லடக்கம்.

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் வயது 59. இவர் தா.பேட்டை அருகே உள்ள ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். ஏட்டு தங்கவேல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று துறையூரிலிருந்து மொபட்டில் தங்கவேல்…

மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்ட திருச்சி கல்லக்குடி காவல் நிலைய போலீஸார்.

கோவில்களில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கோரி மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை…

டிரைவருக்கு டிரைவரான பெண் அரசு அதிகாரி – குடும்பத்தினர் நெகழ்ச்சி.

விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த 32 வருடங்களாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தவர் சக்கரபாணி. இவர் ஓய்வு பெறும் நேரத்தில் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவுக்கு ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்…

மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் ரெங்க நாதரை தரிசனம் செய்த கிராம மக்கள்.

கரூர் மாவட்டம் தோகமலை பகுதியில் உள்ளது ஆர்.டி.மலை, பாறைகிழம், அழகாபூர், கிராமனம்பட்டி ஆகிய கிராமங்கள். இக்கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஸ்ரீரங்கம் பெருமாளே குலதெய்வம். இதனால் இப்பகுதி மக்கள், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கரூரில் இருந்து மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து, தங்களது…

உலக சைக்கிள் தினம் – 50 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் செய்த திருச்சி எஸ்.பி.

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சைக்கிள், பல விதமான நினைவுகளை உண்டாக்கி இருக்கும். குறிப்பாக எந்த ஒரு மனிதனும் சைக்கிளை ஓட்டி தன் வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் இன்று ஜூன் 3-ம் தேதி…

லால்குடி திமுக 13 வது வட்ட கிளை கழகம் சார்பில் டாக்டர் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா.

திருச்சி மாவட்டம் லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரில் திமுக 13 வது வட்ட கிளை கழக செயலாளர் எல்ஆர்எஸ். சண்முகம் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 பிறந்தநாளை முன்னிட்டு, லால்குடி நகர செயலாளர் துரைமாணிக்கம் கட்சி கொடியேற்றினார். விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள்…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்கை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத் துறையை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் (ED) தற்காலிகமாக முடக்கியதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த சமீபத்திய நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக அமைப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறைகளின் ஒரு பகுதிதான். மக்கள் இயக்கங்கள்,…

திமுக திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் டாக்டர் கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா – நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்.

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர்…

நகரங்களின் துய்மைக்கான மக்கள் இயக்கத்தை திருச்சியில் துவக்கிய கலெக்டர், மேயர்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை சென்னை ராயபுரத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு நகரங்களின் இந்த திட்டம் தொடங்கப்பட்டது அதே போல திருச்சி மாநகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது இதில் மாவட்ட ஆட்சி தலைவர்…

உயிரிழந்த ஊர்காவல் படை வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய கமிஷ்னர்.

திருச்சி மாநகர ஊர்காவல்படையில் கடந்த 2011 -ம் ஆண்டு முதல் ஊர்காவல்படையில் பணிபுரிந்து வந்தவர் வெங்கடேஷ் இவருக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு ( சிறுநீரக பாதிப்பு ) திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

கூட்டுறவு இணைப் பதிவாளரின் வாகனத்தை முற்றுகை யிட்ட விவசாயி களால் கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்நிலையில் அரியமங்கலம்…

திருச்சியில் +2 மாணவியை கற்பழித்த விவசாயி போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேலரசூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி இவரது மகன் முத்து வயது 50 இப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை இவர் மீது பிளஸ் 2 பள்ளி மாணவியை கற்பழித்ததாக லால்குடி மகளிர் காவல்…

அமைச்சர் தொகுதிக்கு கூடுதல் நிதி மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டத்தில் அ.தி.மு.க. வெளிநடப்பு.

திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம் மற்றும் 2022 -23 பட்ஜெட் விவாதக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் புதிய மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், துணை மேயர் திவ்யா உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற…

மாநகராட்சி புதிய கமிஷனராக Dr.வைத்தி நாதன் பொறுப்பேற்பு.

திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக டாக்டர் வைத்திநாதன், இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் மாநகராட்சி நகர பொறியாளார் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், துணை ஆணையர் தயாநிதி…

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட+2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் அதிரடி…