Category: திருச்சி

பொங்கல் தொகுப்பில் கரும்பினை சேர்க்க வலியுறுத்தி அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் சாலையில் படுத்து போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா நடந்தது. இதில் செங்கரும்பை பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்க்க வலியுறுத்தியும், நிலுவைத் தொகை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றிய சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது…

மாநில அளவிலான கபடி போட்டி – 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் பி.டி.எஸ் ஸ்போர்ட் கிளப் மற்றும் தீம் பாய்ஸ் நண்பர்கள் நடத்தும் 28 ஆம் ஆண்டு மாநில அளவிலான இரண்டு நாள் கபடி போட்டிகள் இரவு போட்டியாக நடைபெற்றது. இப் போட்டியை ஏர்போர்ட் ஊர் பஞ்சாயத்தார்கள் முக்கியஸ்தர்கள் வாலிப…

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு 9 விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. பயணிக்கும் இரண்டு சதவீத பயணிகளை மட்டும் இன்று முதல் கோவிட் பிஎப் 97 வகை வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு…

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை – புத்தாடை அணிந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளை டிசம்பர் 25-ந்தேதி கிறஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 1-ந்தேதி முதல் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு…

திருச்சியில் பாத்திமா ஜொஹரா நிஸ்வான் மற்றும் மக்தப் மத்ரஸா புதிய கட்டிடத்தை தேசிய தலைவர் காதர் மொய்தீன் திறந்து வைத்தார்.

திருச்சி காஜா தோப்பு, அண்டகொண்டான் பகுதியில் உள்ள முஹம்மத் பூறா ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத் சார்பில் பாத்திமா ஜொஹரா நிஸ்வான் மற்றும் மக்தப் மத்ரஸா புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம்…

300 ஆண்டுகால பழமையான ஆஞ்சநேயர் சிலை மீட்பு – இருவர் கைது.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி பாலமுருகன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 3000- ஆண்டு கால பழைமையான கல் சிலை…

மக்கள் மறுமலர்ச்சி தடம் மற்றும் இந்திய பௌத்த சங்கம் இணைந்து திருச்சியில் பெளத்த கருத்தரங்கை இன்று நடத்தியது.

மக்கள் மறுமலர்ச்சி தடம் மற்றும் இந்திய பௌத்த சங்கம் தமிழ்நாடு கிளை சார்பாக பெளத்த கருத்தரங்கு திருச்சி பிரீஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக டெல்லி அரசின் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம்…

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் – திருச்சி அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

அ.தி.மு.க. நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். அதே போல திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ஆம்.ஜி.ஆர்-ன் திருவுருவ…

தந்தை பெரியார் நினைவு நாள் – தி.க தலைவர் வீரமணி, அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை.

திருச்சியில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திராவிடக் கழகத் தலைவர் வீரமணி, கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்களும் மாலை…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதேசி 2-ம் நாள் உற்சவம் – முத்து கிரீடம் வைர அபய ஹஸ்தத்துடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவின் பகல் பத்து இரண்டாம் நாள் திருவிழாவான இன்று உற்சவர் நம்பெருமாள் முத்து கீரிடம், வைர அபய ஹஸ்தத்துடன்,…

திருச்சி கல்லுக்குழி, தபால் நிலையம் ஆஞ்சநேயர் கோவிலில் 1,00008 வடமாலை, 10,008 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டது.

திருச்சியில் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தலைமை தபால் நிலையம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது.மார்கழி மாதம் அமாவாசை திதியிலேயே அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட வேண்டும். அதன் அடிப்படையில் டிசம்பர் 22 ம் தேதி…

டீக்கடையை உடைத்து பணம் கொள்ளை – ஆயுதங்களுடன் 2 வாலிபர்கள் கைது.

திருச்சி செந்தண்ணீர்புரம் ஆகாஷ் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் பாலக்கரை கெம்ஸ்டோன் திருப்பாச்சி அம்மன் கோவில் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ரவிச்சந்திரன் பாலக்கரை…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சிறுபான்மை நலஉரிமைப் பிரிவின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா – அமைச்சர் மகேஷ் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள பொன்மலை புனித சூசையப்பர் பவளவிழா அரங்கில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கிறிஸ்துமஸ் நற்செய்தியை வழங்கினார் . அப்போது அவர்…

வைகுண்ட ஏகாதேசி ரத்தின நீள்முடி கிரீடம் அலங் காரத்தில் காட்சியளித்த பெருமாள்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழா. நேற்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா துவங்கியது.பகல் பத்து முதல் நாள் திருவிழாவான இன்று விருச்சக…

ஜனவரி 19-ம் தேதி சென்னையில் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூரா. விஸ்வநாதன் அறிவிப்பு.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர்…