Author: JB

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களில் பாடமாக்க வேண்டும் – ஜமா அத்துல் உலமா சபை பொதுக் கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை சார்பில் 75வது சுதந்திர தின பொதுக்கூட்டம் திருச்சி மரக்கடை அருகே இன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை பொருளாளரும், தக்வா பள்ளி வாசல் தலைமை இமாமும்மான…

திருச்சியில் இருந்து பிற மாவட்டங் களுக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி – தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் ஏற்பாடு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலமாக இன்று 15.08.2022 தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக திருச்சியில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக திருச்சி சென்னை வழித்தடத்தில் 150 பேருந்துகளும், தஞ்சாவூர்…

திருச்சியில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கைது.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தலைமைச் செயலகம் நோக்கி நடை பயணம் பாலக்கரையில் துவங்கி நடைபெற்றது. 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் முஸ்லிம்களும் தமிழின…

திருச்சி மலைக் கோட்டையின் உச்சியில் பட்டொளி வீசி பறந்த மூவர்ண தேசிய கொடி.

இந்திய நாட்டின் 76-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பிரசித்தி பெற்ற கோவிலும் தென் கயிலாயம் என்றும்…

தமிழகத்தில் வன்முறையை தூண்டக் கூடிய சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – ம.ம.க மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது பேட்டி.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் பிரண்ட்ஸ் பிளட் பேங்க் இணைந்து 28-வது ஆண்டாக திருச்சி பாலக்கரை அர்ரய்யான் மர்க்கஸ் அரங்கில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் சிறப்பு முகாம் திருச்சி கிழக்கு…

75-வது சுதந்திர தின விழா – தேசிய கொடி ஏற்றிய கலெக்டர் பிரதீப் குமார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய முழுவதும் கோலாகலமாக சுதந்திர தின விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வண்ண…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் குண்டாசில் கைது.

கடந்த 08-ம் தேதி திருச்சியில் வசிக்கும் 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும் , அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியும் , வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் பிரகாஷ் வயது 22 மற்றும் பரத்…

திருச்சியில் போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக திகழ்ந்திட உரிய நடவடிக்கை – கலெக்டர் பிரதீப் குமார்.

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்புட ன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி அண்ணா…

75-வது சுதந்திர தின விழா – திருச்சி ரயில் நிலையத்தில் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப் பாதை காவலர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொண்டனர். இதில் பயணிகளின் உடைமை மற்றும் வெளி…

போதைப் பொருட் களுக்கு எதிரான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி – மாணவ மாணவிகள் பங்கேற்பு.

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு திருச்சி மாநகராட்சி அலுவலக முன்புற சாலையில், ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்றவர்கள்…

திருச்சியில் நடந்த “சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள்” என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி.

டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஓவிய மாணவர்களுக்கு சுதந்திர சிறகுகள் சுவாசத்தின் சுவடுகள் என்ற தலைப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 140 மாணவ, மாணவிகள் ஒவ்வொரு வரும் நான்கு…

திருச்சி மாநகராட்சி சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டி – கிரிக்கெட் விளையாடி அசத்திய மேயர் அன்பழகன்.

திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான 2-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டியை மாநகராட்சி மேயர் அன்பழகன் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார்.…

இந்தியாவில் 30 ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கோரி சென்னை தலைமை செயலகம் நோக்கி த.ம.ஜ.க நடை பயணம்.

இந்த நடை பயணம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிப் செய்தியாளர்களிடம் பேசுகையில்… குறிப்பாக தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை போது தமிழக முதல்வராக இருக்கும் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசும்போது 500 கைதிகளை…

75-வது சுதந்திர தினவிழா – திருச்சியில் நடந்த மாரத்தான் ஓட்டம்

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திரதினவிழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது, இதனிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்துவதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும் என்று 75வது சுதந்திர தினத்தையொட்டி சுவாமி விவேகானந்தா சார்பில் மாரத்தான் ஓட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. தென்னூர் உழவர்சந்தையிலிருந்து தொடங்கி நீதிமன்றம், கண்டோன்மென்ட்,…

தற்போதைய செய்திகள்