Latest News

மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:- திருச்சி ஏர்போர்ட்டில் ஆட்டோக்கள் நுழைய தடை விதித்த நிர்வாகத்தை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்:- தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் விசிக கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்:

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட தாயின் உடலை வீட்டில் வைத்த மகன்.

பெரம்பலுார் மாவட்டம், பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் பாலமுருகன்,38, இவரது தந்தை வேலு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பும், தாய் மூக்காயி கடந்த 10 மாதங்களுக்கு முன்பும் இறந்தனர். பெற்றோர் இறந்துவிட்டதால் பாலமுருகனுக்கு திருமணமாகவில்லை. இதனால், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட…

டிச 30ம் தேதி திருச்சியில் 400 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

வருகிற 30-ஆம் தேதி தமிழக முதல்வர் திருச்சியில் முடிவுற்ற பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய நலத் திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். அப்போது திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ரூபாய் 400 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு, முடிவுற்ற திருச்சி…

திருச்சி தூய மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்மஸ் விழா.

2021 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதலேயே சிறப்பு பிரார்த்தனைகளுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் களைக்கட்டியது.…

பெரியாரின் நினைவு நாளை, பிறந்த நாள் என பதிவு செய்த எம்எல்ஏ கதிரவன் – சமூக வலை தளத்தில் அட்வைஸ்.

பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியாரின் 48- வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து…

வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கு தீர்வுகான கோரி அமைச்சரிடம் மனு அளித்த அமைச்சர்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற வனவிலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுத்தல் தொடர்பாக, விவசாயிகள், மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர்…

தந்தை பெரியாரின் 48வது நினைவு நாள் – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 48வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, கழக முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கேஎன்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து…

திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசார் அதிரடி – தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபுவுக்கு பொதுமக்களிடம் இருந்து வந்த ரகசிய தகவலையடுத்து போலீஸாரின் உதவியுடன் திருச்சி இ.பி ரோட்டில் உள்ள கோட்டை காவல் உதவி மையம் அருகே செயல்பட்டு வரும் வீ.ஆர்.எல் லாரி…

கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் ஜனவரி 2-ம் தேதி அனுமந் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 100008 வடை மாலை சாத்துதல் விழா நடைபெற உள்ளது.

திருச்சி கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் வருகிற ஜனவரி 2 ம் தேதி ஆஞ்சநேய சுவாமிக்கு 100008 வடை மாலை சாத்துதல் விழா மற்றும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில்…

திருச்சியில் குழந்தையுடன் தாய் தற்கொலை – போலீஸ் விசாரணை.

திருச்சி மாவட்டம் வண்ணாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் இவரது மனைவி பிரியா இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.   இந்நிலையில் இன்று மதியம் ஜெயச்சந்திரன் வீட்டில் இருந்து பிரியா…

திருச்சியில் 108 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி மணிமண்டபம் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சுமார் 108 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு…

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு:

திருச்சி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீயிட்டு அழிக்கப்பட்டது. குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு குட்கா மற்றும்…

பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் மகேஷ் தகவல்

நாளை மறுநாள் டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை மறுநாள்…

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது – பின்னர் நாள்தோறும் பகல் பத்து திருவிழாவில் நம்பெருமாள் பல்வேறு…

திருச்சி ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் போலீஸ் விசாரணை.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்டவாளத்தின் நடுவே தலையில் ரத்த காயங்களுடன் இறந்து நிலையில் கிடந்ததார். இந்நிலையில் அந்த வழியாக நடந்து சென்ற சிலர் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீ விபத்து – 7 கடைகள் சேதம்.

திருச்சி காந்தி மார்க்கெட் நுழைவாயில் அருகே உள்ள டீக்கடையில் இன்று காலை விற்பனை செய்வதற்காக பலகாரங்கள் சுட்டுக் கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டரில் இருந்து கேஸ் லீக்கேஜ் ஆகி தீ பற்றி எரிந்தது. மேலும் மின் ஒயரில் பட்டதில் தீ கடையின் மேற்கூரையில்…

தற்போதைய செய்திகள்